09 ஆகஸ்ட் 2010

புலிகள் ஆதரவுக் குழுக்களிடையே நோர்வேயில் மோதல்! ஆறு பேர் காயம், மூவர் கைது!



நோர்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான இரு தமிழ் குழுக்கள் இடையே மோதலில் ஈடுபட்டவர்களில் ஆறு பேர் காயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் மூன்று பேர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கோவில் திருவிழா ஒன்று இடம்பெற்றபோது சனிக்கிழமை இரவு நெடியவன் அணிக்கும், கே.பி அணிக்கும் இடையில் இந்த மோதல் வெடித்திருக்கின்றது.
ஈழத் தமிழருக்கான நோர்வே பேரவையின் உறுப்பினரும்-நெடியவன் அணியைச் சேர்ந்தவருமான சிவ கணேஸ் வடிவேலு என்பவர் காயம் அடைந்தவர்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். நோர்வே பொலிஸார் இம்மோதல் சம்பவம் தொடர்பாகப் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.இம்மோதல் சம்பந்தப்பட்ட செய்தி பி.பி.சி செய்திச் சேவையில் பிரசுரமானமை குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக