24 ஆகஸ்ட் 2010

இலங்கை பணிப்பெண்ணுக்கு ஆணி அடித்து சித்திரவதை,சவுதியில் கொடூரம்!


சவூதி அரேபியாவில் கடமையாற்றிய பணிப்பெண் ஒருவரின் உடம்பில் ஆணி அடித்து செய்யப்பட்ட மோசமான சித்திரவதையினால் படுகாயமடைந்த நிலையில் அப்பெண் இலங்கை வந்துள்ளார்.
அவர் தற்போது கும்புறுபிட்டி தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பெண்ணின் உடலில் 23 ஆணிகள் இருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாத்தறை பிரதேசத்தின் திஹகொடையைச் சேர்ந்த 49 வயதான எல். பி. ஆரியவதி என்பவரே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்று கடந்த மார்ச் 25ம் திகதி சவூதி பயணமாகியுள்ளார்.
அவரது உடலில் ஆணிகள் அடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கடந்த 21ம் திகதி இலங்கை திரும்பியுள்ளார். தனக்கு உறங்குவதற்கு கூட இடமளிக்கப்படாது சதாவும் வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும், குறித்த வீடடின் எஜமான் இரும்பு ஆணிகளை சூடாக்கி தனது உடலில் அடித்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்
தான் இலங்கைக்கு தனது சம்பளப் பணத்தில் டிக்கட் பெற்றுக் கொண்டே திரும்பியதாகவும் அப்பெண் மேலும் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு பிடகஸ்மன் மற்றும் வலி போக்கும் ஊசி மருந்துகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வைத்தியர்கள் அப்பெண்ணை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக