22 ஆகஸ்ட் 2010

பேஸ்புக்கில் மலர்ந்த காதல் தற்கொலையில் முடிந்த பரிதாபம்!



பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவனுடன் காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட தமிழ் மாணவி ஒருவர் ceiling fan இல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளவராவர். வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் குறித்த மாணவி 11ம் தரத்தில் கல்வி கற்று வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமான 19 வயது இளைஞர் ஒருவருடன் இணையம் ஊடாக காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட குறித்த மாணவி இறுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
காதல் தோல்வியில் ஏற்பட்ட விரக்தி நிலைமையே இந்த தற்கொலைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக பேஸ்புக் மூலம் இருவரும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகவும், கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி குறித்த மாணவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும் அப்போது மாணவின் வீட்டுக்கும் அவர் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து லண்டன் சென்றது முதல் குறித்த மாணவியை அந்த இளைஞர் நிராகரிக்கத் தொடங்கியதாகவும், இதனால் மாணவி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.
மீண்டும் மீண்டும் இணையமூடாக தொடர்பு கொள்ள முற்பட்ட போதிலும் இளைஞர் அவற்றை நிராகரித்த காரணத்தினால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையமூடாகக் காதலித்து உயிரை விடும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக