12 ஆகஸ்ட் 2010

பரீட்சைக்குச் சென்ற மாணவி கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு.


கண்டியிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் பரீட்சைக்குத் தோற்ற வந்த மாணவி ஒருவர் வகுப்பறையில் கைகளும் வாயும் கட்டப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுb பின்னர் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் நேற்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. கண்டி பெண்கள் உயர் நிலைப் பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு பரீட்சை ஆரம்பித்து 45 நிமிடங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டார். இது விவரம் தெரிய வந்ததும், மாணவி மீட்கப்பட்டு, பரீட்சை ஆணையாளரின் விசேட அனுமதியின் பேரில் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக