24 ஆகஸ்ட் 2010

கரைசேர முடியாமல் நடுக்கடலில் தள்ளாடிய குமுதினி.




நூற்றி ஐம்பது பயணிகளுடன் நடுக்கடலில் நேற்றுத் தத்தளித்துக்கொண்டி ருந்த குமுதினி படகை, அக்குவாட்டி படகு கட்டி இழுத்து பாதுகாப்பாக கரைக்கு சேர்த்தது.
இச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்படுவதாவது, நேற்று திங்கட்கிழமை காலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி புறப்பட்ட குமுதினி மோட்டார் படகு திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகப் பழுதடைந்தது. சுமார் 150 பயணிகளுடன் வந்த குமுதினி நடுக்கடலில் திடீரெனப் பழுத டைந்ததைத் தொடர்ந்து பயணிகள் பீதியடைந்தனர்.
இதே சமயம் நெடுந்தீவில் இருந்து சிறிது நேரத்தின் பின் பயணிகளுடன் வந்த தனியார் படகு குமுதினி படகு கடலில் தத்தளிப்பதை அவதானித்து உடன் அதனருகே விரைந்து சென்று குமுதினியைக் கட்டி இழுத்தபடி குறிகாட்டுவானுக்கு வந்து சேர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக