11 ஆகஸ்ட் 2010

துன்னாலைப் பகுதியில் மயக்கமடைந்த நிலையில் இளம் பெண் மீட்பு!



யாழ்ப்பாணம்,துன்னாலைக் குடவத்தைப் பகுதியில் நேற்றுக் காலையில் மயக்கம் அடைந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
துன்னாலை குடவத்தை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு அருகில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இளம்பெண் ஒருவரின் அவலக் குரல் கேட்டுள்ளது.
எனினும் அப்பகுதி மக்கள் பயம் காரணமாக அங்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்றுக் காலை நெல்லியடிப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் மயக்கமடைந்த நிலையில் இருந்த பிரஸ்தாப யுவதியை மீட்டு மந்திகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டார். யாழ். நகரத்தைச் சேர்ந்த பிரஸ்தாப யுவதி எவ்வாறு சம்பவ இடத்துக்குச் சென்றார் என்பது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக