
இதில் வசந்த கருணாகொட விடுதலைப் புலிகளுடனான இறுதிச் சண்டையில் தலைமை வகித்த தளபதி ஆவார். இதேபோல பிரசன்ன சில்வாவும் இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது படையணிக்குத் தலைமை தாங்கியவர். இதுதவிர சந்திரசிறியையும், ஷவேந்திர சில்வாவையும் ஐக்கிய நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகளாக நியமிப்பது மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இப்பதவிகளா என்ற குற்றச்சாட்டுக்களையும் இலங்கை அரசு மீது ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்டப் போரில் இலங்கை புரிந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச சமூகம் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வெளிநாட்டுத் தூதரகங்களில் நியமனம் பெறுகின்ற இவ்வாறான இராணுவ அதிகாரிகள் உதவுவார்கள் என்று அரசாங்கம் நம்புகின்றது. ஆனால் ராஜதந்திரம் என்பது வித்தியாசமான ஒரு நடவடிக்கை என்றும் அதை ஆயுதந்தாங்கும் நபர்களால் கொண்டுநடத்த முடியாது என்றும் வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளன. ஆனால் தமது இராணுவ அதிகாரிகளைப் பயன்படுத்தியே புலிகளின் சர்வதேச வலையமைப்பை உடைத்தெறிய அரசு முனைவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக