05 ஆகஸ்ட் 2010

தமிழினியை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு நீதி மன்று தெரிவிப்பு.


தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்பிரிவு மகளிர் பிரிவு தலைவியான தமிழினி தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர் தமிழினி வவுனியாவில் வைத்து குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இவரை தடுத்து வைத்து விசாரணை செய்யும் போது தமிழீழ விடுதலைப்புலிகள் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக குற்றப்புலனாய்வு காவல்துறையினர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விசாரணைகள் தொடர்பிலான முன்னேற்ற அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக