03 ஆகஸ்ட் 2010

சிறிலங்காவின் நடவடிக்கையில் முன்னேற்றமில்லை.


போருக்கு பிந்திய இலங்கையில், சாதாரணமாக எவரேனும் ஒருவர் எதிர்பார்க்கக் கூடிய அளவுக்கு எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்று உலக சமாதானத்துக்கான நோபல் பரிசை 2008 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட பின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டி அத்திகாரி தெரிவித்தார்.
அவர் இலங்கை நிலைவரம் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அப்பேட்டியில் முக்கியமாக ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்படக் கூடிய சூழ்நிலை இலங்கையில்உருவாக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக