05 ஆகஸ்ட் 2010

களனி பிரதேச செயலகம் முற்றுகை.


பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக களனியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் 3000 பேர் வரையிலான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் களனிப் பிரதேச செயலகத்தை இன்று காலையில் முற்றுகை இட்டார்கள்.
சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா மரம் ஒன்றில் கட்டிப் போட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடு பூராவும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் எதிர்ப்பு நடவடிக்கைக்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அப்போராட்டத்தின் ஒரு அம்சமாகவே இம்முற்றுகை இடம்பெற்றது. களனிப் பிரதேச செயலகத்தில் இருந்த மாமரம் ஒன்றிலேயே அந்தச் சமுர்த்தி உத்தியோகத்தர் கட்டிப் போடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலகத்துக்குள் பலாத்காரமாக நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் செயலகத்தின் உத்தியோகத்தர்களுடன் பேசினார்கள். தற்போது களனிப் பிரதேசத்தில் மேர்வின் சில்வாவுக்கு எதிராக பலத்த கண்டனக் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மேர்வினுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக