04 ஆகஸ்ட் 2010

தாக்க வந்தவர்களுக்கு பதிலடி கொடுத்த மாவோயிஸ்டுகள்.

சத்தீஸ்கார் மாநிலம் தண்டவாடா மாவட்டம் கிரன்துல் அருகே உள்ள கோமியபால் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 6 போலீசார் பலியாகி உள்ளதாகவும், 50 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தண்டேவாடாவில் இன்று அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த 200க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்து சி.ஆர்.பி.எப்., வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே 2 மணி நேரத்துக்கு மேல் சண்டையில் 6 வீரர்கள் பலியாகினர்.
மொத்தம் 75 வீரர்கள் சென்றனர். அவர்களில் 25 பேர் மட்டும் முகாமுக்கு திரும்பியுள்ளனர். 50 வீரர்களை காணவில்லை. தண்டேவாடாவில் நல்ல மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக எஞ்சியிருக்கும் வீரர்கள் திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டிருக்கும் என்று கருத்தப்படுகிறது. இருப்பினும் அவர்கள் அனைவரும் மாவோயிஸ்டுகளிடம் சிக்கியிருக்கலாம் என்ற கோணத்திலும் சி.ஆர்.பி.எப்., உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக