18 ஆகஸ்ட் 2010

இடம்பெயர் முகாம்களில் விடுதலைப் புலிகளின் சுவரொட்டிகள்?



வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் விடுதலைப் புலிகளின் போஸ்ரர்கள் ஒட்ட்பட்டிருந்ததாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தப் போஸ்ரர்கள் அங்குள்ள மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் அச்சுறுத்தல் விடுப்பது போல கையெழுத்துக்களால் எழுதப்பட்டு ஒட்டப்பட்டுள்ளனவாம். அவற்றில் "எங்கள் தேசியத் தலைவர் இறந்துவிடவில்லை. அவரை எவ்வாறு ஒருவரால் கொல்ல முடியும்? அவரை ஒருவராலுமே வெல்ல முடியாது. இராணுவம் பொய் கூறுகிறது. இராணுவத்துடன் தொடர்பு கொள்ளும் எவரும் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும். எங்கள் தலைவரின் கீழ் ஈழப் போராட்டம் தொடரும்" போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து மேற்படி முகாம்களில் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கண்காணிக்கப்பட்டு வந்த சிலர் முகாம்களிலிருந்து தப்பியோடியுள்ளதால் முகாம் நிர்வாகிகளுக்கும், இராணுவத்துக்கும் மேலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மன்னார், வவுனியா யாழ்ப்பாண முகாம்களில் புலனாய்வுப் பிரிவுகள் பலவும் நியமிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல பிரிவுகள் முகாம்களுக்குப் பொறுப்பாக இருக்கின்ற போதும்கூட, புலிகள் பற்றிப் புகைய ஆரம்பித்திருப்பது குறித்து சிரேஷ்ட அதிகாரிகள் மிகுந்த விழிப்புடன் இருக்கிறார்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக