29 ஆகஸ்ட் 2010

பிரபல பாடகி மாயாவை பொய்யராக்க முயற்சிக்கும் அமெரிக்கா.



உலகின் பிரபல பொப்பிசைப் பாடகர்களில் ஒருவரும் , புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழருமான மாயா இலங்கை குறித்து தெரிவித்து வரும் கருத்துக்களை வாபஸ் பெற்றுக்கொண்டு இலங்கை அரசிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.
அவ்வாறு மன்னிப்புப் கோரும்பட்சத்தில் அவரின் அமெரிக்க விசா சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விடும் என்றும் ஆசை காட்டி உள்ளது.
மாயாவின் கணவர் ஒரு அமெரிக்கர் ஆவார். இவர்களுக்கு குழந்தைப் பாக்கியமும் உண்டு. இந்நிலையில் மாயா கிறீன் அட்டையை பெறுகின்றமைக்கு பெரிதும் முயற்சித்து வருகின்றார்.ஆனால் அம்முயற்சி வெற்றி பெறவே இல்லை.
அத்துடன் அமெரிக்காவுக்கு செல்கின்ற ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒரு வகையில் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் பிரச்சினைக்கு உட்படுத்தப்படுகின்றமையும் வழக்கம். இலங்கையின் அரசியல் நிலை குறித்து மாயா தெரிவித்திருக்கும் கருத்துக்களே அவர் அமெரிக்காவில் இவ்விதம் நடத்தப்படுவதற்குக் காரணம் ஆகி இருக்கின்றன.
மாயா தற்போது அமெரிக்காவில் உள்ளார்.அவருக்கு குழந்தை ஒன்று புதிதாகப் பிறந்துள்ளது. பேரனை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தால் மாயாவின் தாய் கலா அமெரிக்காவுக்கு புறப்பட்டு வந்திருக்கின்றார்.
ஆயினும் அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் அவர் நாட்டுக்குள் பிரவேசிக்கா வண்ணம் தடுத்து நிறுத்தி விட்டார்கள். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிலாரி கிளிண்டனின் உதவியை இவ்விடயத்தில் மாயா கோரி இருக்கின்றார். ஆயினும் பயன் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை.
அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு சென்று மாயா மன்னிப்புக் கேட்கும்பட்சத்தில் இப்பிரச்சினை முடிவுக்கு வந்து விடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்,ஆனால் அப்படி ஒருபோதும் மன்னிப்புக் கேட்க மாட்டார் என்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார் மாயா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக