26 ஆகஸ்ட் 2010

மனைவியை கொலை செய்ய முயற்சி! இத்தாலியில் இலங்கையர் கைது.


சொந்த மனைவி மற்றும் அவர்களின் இரு மாதப் பெண் குழந்தை ஆகியோரை தாக்கினார் என்பதற்காக குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இலங்கையர் ஒருவர் இத்தாலியில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
Porto San Giorgio நகரத்தில் உள்ள இலங்கையரின் வீடு ஒன்றில் குடும்ப வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என இத்தாலிய பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்திருக்கின்றது. அவர்கள் அவ்வீட்டை முற்றுகையிட்டனர்.
அப்போது மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்ய முற்பட்டமையையையும், நையப் புடைத்தமையையும், காயப்படுத்தியமையும் நேரில் கண்டனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாய் குழந்தையை தூக்கி வைத்திருந்த நிலையில் தகப்பனின் தாக்குதலில் குழந்தைக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
தாயையும், சேயையும் பொலிஸார் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார்கள். இத்தம்பதிகளுக்கு இடையில் மிக நீண்ட காலமாகவே சண்டை இடம்பெற்று வருகின்றது என்றும் கணவனால் தாக்கப்படுகின்றார் என்று மனைவி முன்பு பல தடவைகள் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கின்றார் என்றும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக