19 ஆகஸ்ட் 2010

மக்களுக்கென சேகரித்த நிதியுடன் சிறிடெலோ அமைப்பின் தலைவர் இந்தியா பயணம்.



யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான சுகாதாரப் பணிகளை பேணுவதற்கெனக் கூறி கூறி மோசடியான முறையில் நிதி சேகரித்த டெலோ அமைப்பின் தலைவரான நிமோ என்றழைக்கப்படும் நிர்மலன் முருகேசு, அந்த நிதியில் அவரது குடும்பத்தாருடன் அண்மையில் சமய வழிபாடுகளுக்காக இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கின்றன.
நிமோவுடன் இந்தியா செல்வதற்காக அவரது மனைவி இங்கிலாந்திருந்து இலங்கை வந்த பின்னர; இருவரும் இந்தியா சென்றுள்ளதாக தெரியவருகிறது.சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக ஜேர்மனிய காவல்துறையினர் நிமோவை விசாரணை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ள அதேவேளை, ஜேர்மனிய காவல்துறையினரின் விசாரணைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே அவர் தற்போது இலங்கையில் வசித்து வருகிறார் அத்துடன் நிமோ ஜேர்மனியப் பிரஜாவுரிமைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1980ம் ஆண்டுகளின் முற்பகுதியில் மன்னாரில் படுகொலைச் சம்பவமொன்றுடன் சம்பந்தப்பட்ட இவர் ஜேர்மனிக்குச் தப்பிச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் கோரி ஜேர்மனிய பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டவராவார்
யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு வந்த இவர் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மக்களுக்கான நிவாரணைப் பணிகளை முன்னெடுப்பதாகக் கூறி இவ்வாறு நிதி சேகரிப்பு மோசடியில் ஈடுபட்டுவந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக