15 ஆகஸ்ட் 2010

பட்டினி போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா.



உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்ககோரி, பட்டினி போராட்டம் நடத்தி, தமிழக அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி, பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தும் தங்கள் போராட்டங்களை கைவிடாது நெஞ்ச உறுதியுடன் தொடர்ந்த வழக்கறிஞர்கள் பாகத்சிங், ராசேந்திரன், பாரதி, எழிலரசு, ராசா, நடராசன் ஆகியோருக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம். நேற்று 16 கால் மண்டபம், திருப்பரங்குன்றத்தில் நடை பெற்றது .
இந்த பொதுக்கூட்டத்தில் முதல் நிகழ்வாக செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவுவணக்க அஞ்சலியை செலுத்தி தியாகசூடரினை வழக்கறிஞர் சங்க செயலாளர் சினராஜா ஏற்றினர்.
இந்த பொதுக்கூட்டத்தை திரு.த.செந்தில், நாம் தமிழர் கட்சி. தலைமையேற்று நடத்தினர் . இதில் பட்டினி போராட்டம் நடத்தி வழக்கறிஞர்களுக்குநினைவு பருசுகள் வழங்கப்பட்டது . நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் வெற்றிகுமார் , ராஜகுரு , சீமான் ஆகியேர் நினைவு பருசுகள் வழங்கினார்கள் .இதனை தொடர்ந்து சமர்ப்பா இசை நிகழ்ச்சியும் , நாம் தமிழ ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை ,புலவர் தமிழ் கூத்தான் தமிழ் மணி , செந்தில், மு .கருப்பைய தமிழ் தேசிய விடுதலை இயக்கம் ஆகியோர் பாராட்டு உரை வழங்கினார்கள். ஏற்புரை வழக்கறிஞர் பாகத்சிங்
கூட்டத்தில் புலிகள் மீதான தடை சட்ட ஆணைக்கு விரோதமானது , சட்டத்திக்கு புறம்பான தடுப்பு சட்டம் புலிகள் மீதான தடைக்கு பொருந்து என்று பேசிய போது பலத்த கரவோசம் எழுப்பபட்டது . இப் பொதுக்கூட்டத்தில் 200 மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டார்
இப் பொதுகூட்டத்தை நாம் தமிழர் இயக்க தோழர்கள் மருது , பிரகாரன் ,சூசை, காந்தி . டானியல் மற்றும் நாகராஜ், சிவா, மதி ,படியராஜன், சண்முகம், ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக