06 ஆகஸ்ட் 2010

சைக்கிள் விபத்தில் வயோதிபர் மரணம்!



மணற்காட்டில் சைக்கிள் ஒன்றில் வீதியால் சென்று கொண்டிருந்த வயோதிபர் ஒருவரை இன்னுமொரு சைக்கிளில் வந்தவர் மோதிய விபத்தில் வயோதிபர் மரணமடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை மணற்காடு பெரியபட்டியில் இருந்து குடத்தனைக்குச் சென்று கொண்டிருந்த 60 வயதான சந்தியா கிறிஸ்தோபிள்ளை என்பவரை மற்றுமொரு சைக்கிள் மோதியதில் ஆழமான கிடங்கில் விழுந்த அவர் மரணமடைந்துள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டது. பருத்தித்துறை நீதிவான் திருமதி.ஜோய் மகாதேவா விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக