27 ஆகஸ்ட் 2010

மன்னாரில் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு.

மன்னார் மூர்வீதி காட்டுப்பள்ளி கடற்கரைக்கு அண்மையில் எரியூட்டப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை இன்று காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.பலியானவர் இனங்காணப்படவில்லை. 50 வயதான இந்நபர், தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் எரியூட்டப்பட்டிருக்கலாம் என மன்னார் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சடலம் தற்போதும் கடற்கரையிலேயே உள்ளது. அவ்விடத்தில் தற்போது இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக