23 ஆகஸ்ட் 2010

கே.பி சொல்வது உண்மையா பொய்யா இனம் காண முடியாத ஊடகங்கள்.



இலங்கை அரசாங்கத்தின் தடுப்பில் உள்ளதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன், இலங்கையின் சில ஊடகங்களுக்கு அவ்வப்போது செவ்விகளை வழங்கி வருகிறார் அண்மையில் அவர் வழங்கிய செவ்வியில் வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா நடேசன் இந்திய உள்துறை அமைச்சர் பா சிதம்பரத்துடன் தொடர்புக்கொண்டு போர் நிறுத்தம் ஒன்று குறித்து பேச்சு நடத்தியதாக குமரன் பத்மநாதன் தெரிவித்திருந்தார்
அப்போது போர் நிறுத்தத்திற்காக சிதம்பரம் பல நிபந்தனைகளை விதித்திருந்தார் என்றும்
இந்த குறித்த விடயம், தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ நெடுமாறன் ஆகியோருக்கு தெரியக்கூடாது என சிதம்பரம் நடேசனிடம் தெரிவித்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்
இவ்வாறான உரையாடலுக்கிடையில் சிதம்பரத்தை முழுமையாக நம்பாத நடேசன், கம்யூனிஸ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே மகேந்திரனிடம் இந்த விடயத்தை தெரிவித்ததாகவும்
ஆதனைத் தொடர்ந்து மகேந்திரன், வை கோபாலசாமியிடமும், நெடுமாறனிடமும் சிதம்பரத்தின் நிபந்தனை தொடர்பாக தெரிவித்ததாக குமரன் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்
இவ்வாறான உரையாடலிக்கிடையில் கோபமடைந்த வை. கோபாலசாமி, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தாம் வழங்கிவரும் ஆதரவை விலக்கிக்கொள்ளப்போவதாக தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்
அத்துடன், இந்திய மத்திய பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியே ஆட்சியமைக்கும் என்பதால், அந்த கட்சியை கொண்டு இலங்கை அரசாங்;கத்தை போர் நிறுத்தத்திற்கு இணங்க வைக்கலாம் என்ற நம்பிக்கையையும் கோபாலசாமி, நடேசனிடம் தெரிவித்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
ஆகவே தான் நடேசனும் சிதம்பரத்துடனான பேச்சுவார்த்தையை கைவிட்டதாக குமரன் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக