03 ஆகஸ்ட் 2010

தாக்குதல்தாரிகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு.


வெற்றி எப் எம் வானொலியின் கொழும்பு அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று இடம்பெற்றபோது தாக்குதல் மேற்கொண்டவர்களைப் பொலிஸார் கண்டுபிடித்துக் கைது செய்ய வேண்டும் என்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் தாக்குதல் குறித்து எதிர்வரும் 23 ஆம் திகதி அறிக்கை ஒன்றை மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு வந்திருந்தமையால் அவர்களை இன்னமும் அடையாளம் காண முடியவில்லை என்று பொலிஸார் மன்றுக்கு தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக