26 ஆகஸ்ட் 2010

மக்களுக்காக போராடுவது தவறென்றால் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்வேன்.



சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சீமான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் உள்ள சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுரைக் கழகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சீமான் நேற்று அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் வெளியே வந்த சீமான், பலத்த போலீஸ் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் செய்தியாளர்களிடம் பேசினார்.
’’இறையாண்மைக்கு எதிராக நான் என்ன பேசி விட்டேன், நான் பேசியதால் இரு நாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் என்றால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே செயலால் இரு நாடுகளின் உறவும் ஏன் பாதிக்கபடவில்லை.
நான் பேசியது தவறு என்றால் இந்த குற்றத்தை தூண்டி விட்ட ராஜபக்சேவிற்கு தண்டனை வழங்குவது யார் ? சீமானை சிறையில் அடைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று தமிழக அரசு பகல் கனவு காண்கிறது.
மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம் தவறு என்றால் அதே தவறை மீண்டும், மீண்டும் செய்வேன்.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அரசியலில் லாபம் அடைவதற்காக நான் அரசியல் இயக்கத்தை தொடங்கவில்லை.
இந்திய சட்டம் 21ன் படி தமது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பது தமிழனுக்கு கிடையாதா ? என்று ஆவேசமாக கேள்விகளை எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக