21 ஆகஸ்ட் 2010

61 வயது பிலிப்பைன்ஸ் பெண்ணை கற்பழிக்க முயன்று வாங்கிக் கட்டிய 41 வயது இலங்கையர்!



இத்தாலியின் மிலான் நகரில் 61 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணிடம் நன்றாக வாங்கிக் கட்டினார் 41 வயது உடைய இலங்கையர் ஒருவர். இப்பெண்மணி தாதியாக கடமையாற்றுகின்றார்.
ஆனால் இவர் கராட்டிக் கலையில் கறுப்புப் பட்டியை பெற்றுக் கொண்டவர். இவர் நேற்று வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் ஒரு தொடர்மாடியில்தான் வசிக்கின்றார்.
இந்த இலங்கையரும் இத்தொடர்மாடியில்தான் இருக்கின்றார். இவர் மின்சாரத்தில் இயங்கும் மாடிப்படி ஊடாக சென்றபோது கத்தரிக்கோல் ஒன்றுடன் இலங்கையர் இவருக்காக வெளி வாசலில் காத்திருக்கின்றார்.
இலங்கையர் உள்ளாடை மாத்திரம் அணிந்திருந்தார். மதுபானமும் அருந்தி இருக்கின்றார்.. கத்திரிக்கோலால் மிரட்டி அவருடைய அறைக்கு இப்பெண்ணை கொண்டு செல்ல முயன்றிருக்கின்றார்.
ஆனால் சாதுரியமாக செயற்பட்ட அந்தப் பெண் கராட்டி முறையில் இலங்கையரைத் தாக்கி நிலைகுலையச் செய்தார். பின் பெரிதாக சத்தமிட்டார். அவரின் சகபாடிகள் இருவர் அவரின் குரலைக் கேட்டு உதவிக்கு வந்தனர். பொலிஸார் தொலைபேசி மூலம் அழைக்கப்பட்டனர். இலங்கையர் கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக