28 ஆகஸ்ட் 2010

ஒன்லைன் எரைவல் விசாவை ரத்து செய்யும் திட்டம் மீள்பரிசீலனையில்!


ஒன்லைன் எரைவல் விசா வழங்கும் நடைமுறையை அடுத்த மாதம் 30 ஆம் திகதியுடன் இல்லாமல் செய்யும் திட்டத்தை இலங்கை மீள்பரிசீலனை செய்கின்றது.
சிங்கப்பூர், மாலைதீவு ஆகிய நாடுகளின் பிரஜைகள் தவிர்ந்த ஏனையோருக்கு இத்திட்டத்தின் கிழ் விசா வழங்கப்பட மாட்டாது என்று குடிவரவு-குடியகல்வு திணைக்களம் முன்பு அறிவித்திருந்தது.
இப்புதியத் திட்டத்தின் அடிப்படையில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு சென்று விசா விண்ணப்பிக்க கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டும் இருந்தது.
எனினும், இலங்கைப் பிரஜைகளுக்கு ஒன் எரைவல் விசா வழங்கும் நாடுகளினது பிரஜைகளுக்கு இலங்கை ஒன் எரைவல் விசா வழங்கத் தயார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இத்திட்டம் மீள்பரிசீலனை செய்யப்படுகின்றது என குடிவரவு -குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரி டபிள்யூ.ஏ.சி.பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக