03 ஆகஸ்ட் 2010

சிவந்தனின் மனிதநேய நடைபயணம் பதினோராவது நாள்.


ஈழத் தமிழருக்கு நீதி கோரி ஐ.நா மனித உரிமைகள் சபையை நோக்கி மனித நேய நடைப் பயணத்தை மேற்கொண்டு வரும் சிவந்தன் 11 ஆவது நாளாக இன்று பிரான்ஸின் லாக்கூர்னோவ், ஓபல்லியே ஆகிய நகரங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.
நேற்று செவ்றோனைச் சென்றடைந்திருந்த சிவந்தன் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்காக நகரசபையால் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் அக வணக்கம் செலுத்தியதுடன், அங்கு நடைபெற்ற மக்கள் ஒன்றுகூடலிலும் கலந்துகொண்டிருந்தார்,
இன்று காலையில் செவ்றோனில் இருந்து புறப்பட்ட சிவந்தனும், பொதுமக்களும் லாக்கூர்னோவ் ஒபவில்லியே ஆகிய இடங்களை நோக்கி முன்னேறிக் கொண்டு செல்கின்றார்கள்.
பாரிஸ் நகரசபையை இவர்கள் சென்றடைந்த பின்னர் அங்கு நகரசபை உறுப்பினர்களுடனான சந்திப்பும், மாபெரும் மக்கள் ஒன்றுகூடலும் இடம்பெறவுள்ளன. இதனையடுத்து சுமார் 600 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் தொடர்ந்து முன்னேறுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக