17 ஆகஸ்ட் 2010

ஈழத் தமிழர் ஒருவர் ஜேர்மனி செனட்டர் ஆகிறார்:



இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் குடியேறியுள்ளவரும் கோடீஸ்வரரும் கொள்கலன் தொழில் அதிபருமான அயன் கிருகரன் ஹம்பேர்க்கின் பொருளாதார விவகாரங்களுக்கான செனட்டராகப் பதவியேற்கவுள்ளார். இது குறித்து கூறிய அவர் "அந்த நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்'" என்றார். ஹம்பேர்க்கின் பிரஜையான கிருகரன் இப்போது ஜேர்மனியின் பிரஜாவுரிமையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்புவதாக ஜேர்மனி ஊடகங்களை மேற்கோள்காட்டி இலங்கை இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் பிரஜாவுரிமையை கிருகரன் பெற்றுக்கொள்ள வேண்டுமென ஜேர்மன் அதிபர் (கண்சிலரின்)அங்கெலா மேர்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கையில் பிறந்த கிருகரன் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து சென்று, அதன்பின் அங்கிருந்து ஹம்போர்க்கிற்கு குடிபெயர்ந்தார். விசேட கொள்கலன்களை உற்பத்திசெய்யும் நிறுவனமான பேர்ம் கப்பிட்டல் இன்ரர்மொடலின் உரிமையாளர் கிருகரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பதவி விலகும் செனட்டர் அக்ஸெல் ஜெடஸ்கோவின் இடத்திற்கு 70 வயதான கரன் செனட்டராகவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக