02 ஆகஸ்ட் 2010

அடுத்தமாதம் மகிந்த ஐ.நாவால் விசாரணைக்கு உள்ளாகலாம்?


இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்களை ஆராய்ந்து ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை கூற நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழு அடுத்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விசாரணை செய்யும் என்று சர்வதேச அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா நிபுணர் குழு இலங்கைக்கு வருகை தர முடியாது என்று அரசு அறிவித்துள்ள நிலையில் என்ன செய்வது? என்று திண்டாடிக் கொண்டிருந்த நிபுணர் குழுவுக்கு துரும்புச் சீட்டு ஒன்று தற்போது கிடைத்துள்ளது.
அதாவது அடுத்த மாதம் அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் ஐ.நா பொதுச்சபை கூடுகிறது. இதைச் சரியான தருணமாகப் பயன்படுத்த நிபுணர் குழு முடிவெடுத்துள்ளது. இப்பொதுச் சபைக் கூட்ட விவாதத்தில் பங்குகொள்வோர் பட்டியலில் மஹிந்தரின் பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளமை தற்செயலாக நடந்திருக்கும் விடயம் அல்ல என்பது வெளிப்படை.
மஹிந்தர் இக்கூட்டத்துக்கு வருகை தருவார் என்றும் அப்போது அவரை விசாரணை செய்யலாம் என்றும் ஐ.நா உயர்மட்டத்தினர் ஊகித்து இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைக்கு அடுத்த மாதம் பிள்ளையார் சுழி போட இருக்கின்றார்கள் என்பது தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக