15 ஆகஸ்ட் 2010

பிரச்சனையை கிளப்பும் ப்‌ரியாமணி.



பாசிஸ சிங்கள அரசின் ஊதியம் வாங்காத விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார்கள் சல்மான்கானும், விவேக் ஓபராயும். சல்மான்கானின் சகவாசத்தால் இந்த தூதர் வேலையை அசினும் செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டது உலகுக்கே தெ‌ரியும். அப்படியிருக்க ப்‌ரியாமணியும் அந்த வலையில் விழ‌த் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.போக்க‌ரி படத்தை சல்மான்கானை வைத்து வான்டட் என்ற பெய‌ரில் இந்தியில் இயக்கினார் பிரபுதேவா. படம் ஹிட். அப்போதே வான்டட் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என தயா‌ரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் ப்‌ரியாமணியை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இது குறித்து ப்‌ரியாமணியிடம் கேட்டதற்கு, வான்டட் இரண்டாம் பாகத்தில் நடிக்க கேட்டு என்னை இதுவரை யாரும் அணுகவில்லை. அப்படி கேட்டால் உடனடியாக ஒப்புக் கொள்வேன். சல்லு பாயுடன் நடிக்க யாருக்குப் பிடிக்காது என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.யாருடைய படங்களை தவிர்க்க வேண்டும் என்று தமிழர்கள் நினைக்கிறார்களோ அவர்கள்தான் இந்த நடிகைகளுக்கு பிடித்தமான நடிகர்கள்.திரையுலகமே ரெட் கார்ட்டை ரெடி பண்ணி வையுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக