07 ஆகஸ்ட் 2010

ஐ.நா முன்றலில் 20 ஆம் திகதி மாபெரும் தமிழர்கள் எழுச்சிப் போராட்டம்!



ஈழத் தமிழருக்காக நீதி கோரி சிவந்தன் நடத்தும் மனித நேய நடைப் பயணத்தின் நிறைவாக எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஐ.நா முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு நடவடிக்கையும்,ஐ.நா அதிகாரிகளுக்கு ஈழத் தமிழர் சார்பில் எழுத்துமூல கோரிக்கைகளை கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற உள்ளன.
சிவந்தன் இன்று 15ஆவது நாளாக இப்பயணத்தைத் தொடர்கின்றார். நேற்று மொத்தம் 43 கிலோமீற்றர்கள் நடந்திருந்தார்.
இன்று காலையில் மீண்டும் நடை பயணத்தை ஆரம்பித்து சில கிலோமீற்றர்கள் கடந்துள்ளார். Saint-flavy என்ற இடத்தில் இருந்து Troyes நோக்கி தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சிவந்தனுடன் 12 பேர் வரையில் இணைந்து செல்கின்றனர். நேற்று இத்தாலியில் இருந்து 7 பேர் இணைந்து கொண்டனர். பிரான்ஸில் இருந்து இன்றும் தொடர்ச்சியாக மக்கள் இணைந்து வருகின்றனர்.
Troyes பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சிவந்தனை வரவேற்கக் காத்திருக்கின்றார்கள். இந்த மக்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து அவரது நடை பயணம் தொடர இருக்கின்றது.
அவர்களில் சிலரும் சிவந்தனது மனிதநேய நடை பயணத்தில் இணைந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளாது. பாரிஸில் இருந்து 129 கிலோமீற்றர்கள் தூரம் நடந்துள்ள சிவந்தன், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையை சென்றடைய இன்னும் 479 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக