25 ஆகஸ்ட் 2010

ஆயுதக் குழுக்களுக்கு சிறீலங்கா இராணுவம் எச்சரிக்கை.



பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சிறீலங்கா இராணுவத்தினர் ரீ.எம்.வீ.பி., டெலோ, புளொட் மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய தமிழ்த்தேச விரோத ஆயுதக் குழுக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள முன்னாள் ஆயுதக் குழுக்களுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் ஆயுதம் பறிக்கப்பட்டுள்ள சம்பவத்தினை அடுத்து பிரதேச அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
ரீ.எம்.வீ.பி., டெலோ, புளொட் மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக