20 டிசம்பர் 2012

குஜராத் தமிழர்கள் பேராதரவு! 86,373 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் மோடி!

 Narendra Modi Wins From Maninagar குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் நரேந்திர மோடி 86,373வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளார். குஜராத் மாநிலத்தின் மணிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக முதல்வர் நரேந்திர மோடி போட்டியிட்டார். அவரை எதிர்த்து கேசுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்த்தன் கட்சி வேட்பாளரை நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மனைவி ஸ்வேதா பட் இறக்கப்பட்டார். தாம் மோடிக்கு எதிராக களம் இறக்கப்பட்டிருப்பதால் தம்மை பிற கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று ஸ்வேதாவுக்கு ஆதரவாக கேசுபாய் கட்சி தமது வேட்பாளரை விலக்கிக் கொண்டது. இந்த மணிநகர் தொகுதியில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்களும் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டு தொலைக்காட்சி ஊடகங்கள் பலவும் கடந்த சில நாட்களாக இந்தத் தொகுதியில் முகாமிட்டிருக்கின்றன. தமிழக பாஜக தலைவர்கள் குழுவும் இந்த மணி நகர் தொகுதியில் இறங்கி பிரச்சாரம் செய்தது. இந்த நிலையில் இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டது முதலே நரேந்திர மோடி வெற்றி முகத்தில்தான் இருந்தார். தொடக்கத்தில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் என்று கூறப்பட்டாலும் 86,373 வாக்குகள் வித்தியாசத்தி வென்றிருக்கிறார் மோடி. நரேந்திர மோடிக்கு கிடைத்த வாக்குகள் - 1,20,470 , காங்கிரஸ் வேட்பாளர் ஸ்வேதா பட்- 34,097! மணிநகரில் மோடியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த குஜராத் வாழ் தமிழர்கள், இந்த தொகுதியில் நாங்கள் பாதுகாப்பாக பணிகளை செய்யவதற்கு மோடியின் அரசு உதவியாக இருக்கிறது. அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இங்கு வசிக்கும் தமிழர்களில் 90 விழுக்காட்டினர் மோடியைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக