08 டிசம்பர் 2012

புலிகளுக்கு எதிராக சம்பந்தன் பேச்சு பாராட்டுகிறார் நிமால்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது இனவாத நிலைப்பாடுகளில் இருந்து மாறியுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன்  ஆற்றிய உரை தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சம்பந்தன் உரையின் முதல் பகுதியில் தெரிவித்த விடயங்கள் குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத நிலைப்பாடுகளில் இருந்து மாறியுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் சிங்கள மக்களை மாத்திரம் கொலை செய்யவில்லை. எனினும் கூட்டமைப்பினர்  இவ்வாறு சுதந்திரமாக பேச முடியாதிருந்தது. ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும்  புண்ணியம் கிடைக்க, கூட்டமைப்பினர்  தற்போது சுதந்திரமாக பேசுகின்றனர். தற்போது, தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் தேவையே நமக்குள்ளது. இராணுவம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தி, இனங்களின் மனங்களை வென்று வருகிறது. எனினும் இதனை விட துரிதப்படுத்த வேண்டும். நாட்டுக்கு தேவையானதை இராணுவத்தினர் நிறைவேற்றினர், இப்போது அவர்களை வீடுகளுக்கு செல்லுமாறு கூறமுடியாது எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக