13 டிசம்பர் 2012

சம்பந்தனின் கருத்து கூட்டமைப்பின் கருத்தல்ல என்கிறார் அரியநேந்திரன்

வடக்கு கிழக்கிலிருந்து இருந்து சிறீலங்கா இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டுமென தாம் கோரவில்லை நாடாளுமன்றத்தில் சம்பந்தன் ஆற்றிய உரை அவரது தனிப்பட்ட கருத்தாகும். அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய சம்பந்தனின் உரைதொடர்பாக அரியநேத்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அப்பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்ல என தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பாலும் அவரவர் தனிப்பட்ட கருத்துக்களையே பேசுகின்றனர். கட்சியின் உத்தியோகபூர்வ கருத்தும் அல்ல என அரியநேத்திரன் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேற்ற வேண்டும் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தாகும். சம்பந்தனின் உரையை ஒட்டுமொத்த கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படவில்லை.
அதேவேளை வடகிழக்கிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேறும் பட்சத்தில்தான் அப்பிரதேசம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும். எனவே வடக்கு கிழக்கிலிருந்து முற்றாக இராணுவம் வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தான் கொண்டிருப்பதாக அரியநேத்திரன் தெரிவித்தார் என தினக்கதிர் இணையம் செய்தி வெளியுட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக