14 டிசம்பர் 2012

அடடா..!இவரையுமா?

டக்ளஸ்&பசில் 
உளநலப்பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட யுவதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் படையினர் திருப்பி அனுப்பிய பரிதாபம் நேற்று நடந்துள்ளது.படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட குறித்த யுவதிகள் உள நலப்பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டமை கடந்த சில தினங்களாக பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.
முன்னதாக அவர்களை பார்வையிடச்சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.வன்னி படை கட்டளைத்தலைமையக பணிப்பினை மேற்கோள் காட்டியே தம்மை உள்நுழைய வைத்தியர்கள் அனுமதி மறுத்ததாக சிறீதரன் தெரிவித்தார்.இந்நிலையினில் இரண்டாவது தடைவையாக நேற்றும் எஞ்சிய இரு யுவதிகளையும் பார்வையிட அவர் முற்பட்ட போது ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியிருந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் பார்வையிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது.பாதுகாப்பு அமைச்சக உத்தரவின் பிரகாரம் அவர் திருப்பி அனுப்பபட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே வைத்தியசாலையில் தொடர்ந்தும் இரு யுவதிகளே சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் ஏனையவர்களை ஆற்றுப்படுத்த திருக்கோணேச்சரம் கோவிலுக்கு படைத்தரப்பு சுற்றுலா அழைத்து சென்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக