16 டிசம்பர் 2012

சாளம்பைக்குளத்திலிருந்து தமிழர்களை வெளியேறுமாறு முஸ்லீம்கள் பெயரில் சுவரொட்டி!

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் அப்பகுதி கிராம சேவகரான வை.நாயர் என்பவரின் றப்பர் முத்திரையுடன் இஸ்லாமிய கலாசார தலைவர் ஹசன் என்பவரின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தச் சுவரொட்டிகளில் சாம்பைக் குளத்தில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் இம்மாதம் 16 ஆம் திகதிக்கு முன் வெளியேற வேண்டுமென கிராம சேவையாளர் ஊடாக கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அப்படி வெளியேறாத பட்சத்தில் வன்முறையாக வெளியேற்றப்படுவீர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சாளம்பைக்குளத்தில் உள்ள காணிகள் அனைத்தும் முஸ்லீம்களுக்கு சொந்தமானது என்றும் அந்தச் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இவ்விடயம் குறித்து நாளை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சாளம்பைக்குளம் என்பது ஒரு தமிழ் கிராமமாகும். அங்கு பிற்பட்டகாலத்தில் முஸ்லீம்கள் குடியேறியிருந்தார்கள். திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் போல திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றம் அங்கு இடம்பெற்றது. அரசியல் செல்வாக்கின் மூலம் தற்போது பலம் பெற்றிருக்கும் முஸ்லீம்கள் தற்போது அங்குள்ள பூர்வீககுடிகளான தமிழ் மக்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றிவிட்டார்கள் என கூக்குரல் இடுவோர் இந்த விடயத்தில் வாய் திறப்பார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக