10 டிசம்பர் 2012

துமிந்த கைதாகாவிடின் கொலன்னாவ போர்க்களமாக மாறும் என்கிறார் கிருணிகா!

துமிந்த&கோத்தபாய 
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நாடு திரும்பும்போது அவர் விமான நிலையத்தில் கைதுசெய்யப்படாதுவிடின், கொலன்னாவைப் பகுதி போர்க்களமாக மாறும் என மறைந்த பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிரூணிக்கா பிரேமச்சந்திர நேற்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நாடு திரும்பும்போது அவர் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிடின், கொலன்னாவையில் மற்றுமொரு போர் மூளும் எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஆசி வேண்டி அண்மையில் நடத்தப்பட்ட போதி பூஜை பற்றி அவர் தெரிவிக்கையில், குற்றச்செயல் வழக்கு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட முதலாவது பூஜை இதுவாகத்தான் இருக்க முடியும் எனவும் கூறினார்.
ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவராக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் உள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்போது சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக