05 டிசம்பர் 2012

மேர்வின் சில்வா போன்று சண்டியனாகும் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி!

கொழும்பில் அமைந்துள்ள ரூபவாகினி தொலைக்காட்சி அலுவலகத்திற்கு முன்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி தயானந்தா போக்குவரத்து பொலிசாருடன் மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
களனியில் பொலிசார் மற்றும் சில அரசியல்வாதிகளை தமது அடாவடித்தனத்தால் வெருட்டி வைத்திருக்கும் மேர்வின் சில்வா போன்று கொழும்பில் போக்குவரத்து பொலிசாருடன் மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கின்றார் அமைச்சரின் தம்பி தயானந்தா.
தீவக மக்களின் வாக்குகளோடு யாழ். மண்ணில் அசைக்க முடியாத சக்தியாக இன்று வரை விளங்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பியான தயானந்தாவின் அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ள யாழ். மாவட்ட வர்த்தகர்களும் விசனம் வெளியிட்டுள்ள நிலையில் கொழும்பில் போக்குவத்து பொலிசாருடன் வாய்த்தர்க்கத்தில் டக்ளஸின் தம்பி தயானந்தா ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
அமைச்சரை பகைக்கவிரும்பாத யாழ்.மாவட்ட பொலிஸ் திணைக்களம், தயானந்தா செய்யும் எதனையும் ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைகழக மாணவர்கள் பொலிசாரினால் தாக்கப்படும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி தாயனந்தா பார்வையாளராக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக