28 டிசம்பர் 2012

மன்னார் ஆயரை விசாரணைக்குட்படுத்திய சிங்கள புலனாய்வாளர்கள்!

மன்னார் ஆயர் 
மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய பிதா. இராயப்பு ஜோசப் ஆண்டகை சிறீலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கன் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுதல் தொடர்பில் ஆயரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து அகதிகள் நாடுகடத்தப்படுதல் தொடர்பில் அவரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.நாடு கடத்தப்படும் தமிழர்கள் இலங்கையில் பல நெருக்கடிகளுக்கு ஆளாவதாக ஆயர் அவுஸ்திரேலிய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக