05 டிசம்பர் 2012

தமிழர் பகுதிகளில் இருந்து படைகள் வெளியேற்றப்படவேண்டும்-பற்றிக் பிறவுன்

News Serviceசிறீலங்காவில் மனித உரிமைகள் சீர்கெட்டுச் செல்வது மிகுந்த கவலையளிப்பதாக கனடாவின் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் பரித்தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான பற்றிக் பிரவுன் விடுத்துள்ள அறிக்கையில் தெரவித்துள்ளார். சுதந்திரமாக கருத்து வெளியிடுதல் சுதந்திரமாக கூடுதல் போன்ற உரிமைகளுக்கு சிறீலங்காவில் நடந்துள்ள சமீபத்திய சம்பவங்கள் கடும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளமை அதிகரித்த கவலையை  தருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், தொடரும் அச்சுறுத்தல்கள்,மாணவர் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை என்பன கவலையளிப்பதாக தெரிவித்த பிரவுன் அமைதி வழிப் போராட்டங்களை அனுமதித்து மாணவர் தலைவர்களை உடன் விடுதலை செய்யுமாறு சிறீலங்காவை வேண்டியுள்ளார்.
சிறீலங்காவில் அதிகரித்து வருகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்த செய்திகள் சர்வதேச சமூகத்தின் கரிசனையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரவுன் இராணுவமயமாக்கல் ஏதேச்சதிகார ஆட்சி என்பன சனநாயக முறைமையல்ல என சிறீலங்காவின் இன்றைய நிலைமையை கடுமையாக சாடியுள்ளார்.
தமிழர் பகுதிகளில் இருந்து சிறீலங்கா இராணுவத்தை வெளியேற்றி ஆட்சி அதிகாரத்தை மக்கள் செயற்பாட்டாளர்களிடம் கைய்ளிக்குமாறு வேண்டியுள்ள கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிறவுன் சர்வதேச சமூகம் விரைந்து செயற்பட்டு தமிழர் அபிலாசைகளுக்கான நீதியான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான தருணம் இது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் சிறீலங்காவில் நிலைமைகளைக் கண்டறிய செல்ல முற்பட்டபோது சிறீலங்கா அரசினால் அனுமதி மறுக்கப்பட்டவர் பற்றிக் பிரவுன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக