25 டிசம்பர் 2012

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 7ம் ஆண்டு நினைவுநாள்!

மட்டக்களப்பில் தேவாலயத்தில் தனது பாரியாருடன் நத்தார் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவேளை  தேசத்துரோகிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 07வது ஆண்டு நிறைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்படுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை 03 மணியளவில் நல்லையா வீதியில் இருக்கும் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு தொகுதி தமிழரசுக்கட்சியின் கிளையினால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி கிளைத்தலைவர் பரமானந்தம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக