16 டிசம்பர் 2012

யாழில் சிங்களத்தால் மேலும் தமிழர்கள் கைது செய்யப்படலாம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குறித்த கைதுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கனவே புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைதுகள் தொடர்பில் யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய்பபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
எந்த அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றி தெளிவுபடுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் போராளிகள் என்ற அடிப்படையில் இந்த கைதுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த காலங்களில் தொடர்புகளைப் பேணியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக