20 டிசம்பர் 2012

விஜேதாஸ ராஜபக்சவின் இல்லத்தின் மீது துப்பாக்கி சூடு!மகிந்த ராஜபக்ஷ நேரில் சென்று ஆறுதல்.

இன்று (20) அதிகாலை துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷவின் வீட்டு வளாகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜேதாஸ ராஜபக்ஷவின் நாவல பகுதியில் உள்ள வீட்டுக்கு முன்னால் இன்று அதிகாலை மூன்று மணியளவில் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்படி இன்று விஜேதாஸ ராஜபக்ஷவின் வீட்டுக்குச் சென்ற மகிந்த ராஜபக்ஷ  அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக