31 டிசம்பர் 2012

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை!

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிகாரப் பகிர்வு மற்றும் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழு முறைமை தொடர்பில் உடன்பாடு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சுயாதீனமாக பேச்சுவார்த்தை நடாத்த முடியாத நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் எவ்வாறு நம்பிக்கைக் கொள்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு எவ்வாறு அதிகாரங்களை பகிர்வது என்பது தொடர்பான யோசனைத் திட்டத்தை தமது கட்சி ஏற்கனவே அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக