02 டிசம்பர் 2012

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம்; கனடா மீண்டும் எச்சரிக்கை

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு தொடர்பில் கனடா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேம்படாத பட்சத்தில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.
மேலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு இலங்கை அரசாங்கம் நியாயம் வழங்கத் தவறியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் கிறிஸ்டியன் ரோய் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றக் கட்டமைப்பின் மீதான அண்மைய அழுத்தங்கள் தொடர்பிலும் பிரதம நீதியரசர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் தொடர்பிலும் உன்னிப்பதாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. எனவே நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது.
இலங்கையில் குறிப்பிடக்தக்களவு அரசியல் நல்லிணக்கம், மனித உரிமை மேம்பாடு போன்றன ஏற்படாத பட்சத்தில், 2013ஆம் ஆண்டு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் ஹார்பர் பங்கேற்க மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இலங்கை மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு ஸ்டீபன் இலங்கை அரசிடம் கோரியிருந்தார்.
எனினும், எதிர்பார்க்கப்பட்டளவு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படாமையுடன் மனித உரிமை நிலைமைகளிலும் மாற்றம் ஏற்படவில்லை எனவே பொதுநல வாய நாடுகளுக்கான மாநாட்டை புறக்கணிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக