21 டிசம்பர் 2012

மகிந்தவிற்கும் சம்பந்தனுக்குமிடையே இரகசிய ஒப்பந்தம் உள்ளதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான உடன்பாடு என்ன என்பதை சம்பந்தன் அவர்கள் உடனடியாக அம்பலப்படுத்த வேண்டுமென்று யாழ். மற்றும் திருமலை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த இரகசிய ஒப்பந்தத்தை தமிழ் மக்கள் அலட்சியமாக விட்டுவிடக்கூடாது. அவ்வாறு விட்டால் அது தமிழ் மக்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். எனவே, இந்த ஒப்பந்தம் என்ன என்பதை சம்பந்தன் வெளிப்படுத்த வேண்டுமென்று ஈழத்திலும் புலத்திலும் உள்ள ஏனைய மக்கள் அனைவரும் சம்பந்தன் அவர்களை வலியுறுத்த வேண்டுமென்றும் மேற்படி மக்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாள் தினத்தன்று அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இரா. சம்பந்தனின் காலத்திலேயே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முயற்சியெடுப்பதாக கூறியிருந்தார். இக் கூற்றானது தமிழ் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சம்பந்தன் அவர்கள் அடிக்கடி இரகசியமான முறையில் ஜனாதிபதியைச் சந்தித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதியின் மேற்படி கூற்று தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தன் அவர்கள் கடந்த தடவை நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் புலிகளை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டமையாலேயே அழிந்தார்கள் என்றும் சம்பந்தனின் கடுமையான விமர்சமனமானது தமிழ் மக்களைக் கொதிப்படைய வைத்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி சம்பந்தனின் காலத்தில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்று விருப்பத்தை வெளியிட்டமை இருவருக்கும் இடையே உள்ள இரகசிய ஒப்பந்தத்தை படம் பிடித்துக் காட்டுவதாக தமிழ் மக்கள் கருத்து வெளியிட்டுள்னர்.
இந்த நிலையில் சம்பந்தன் அவர்கள் கடந்த தடவை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடார்பாக தமிழீழத்திலுள்ள தேசியப் பற்றாளர் ஒருவர் தனது ஆதங்கத்தை மிக வெளிப்படையாகவே கொட்டியுள்ளார். சம்பந்தன் அவர்களுக்கு எதிராக எழுந்த அந்த ஆதங்கத்தை நீங்களும் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னர், அழுத கண்ணீர் கன்னத்தில் காய்ந்திருந்தபோது, முகா ம் வாழ்வில் தமிழன் முகமிழந்திருந்தபோது, சொந்தங்களை சிறைகளில் விட்டுவிட்டு தமிழர் ஏங் கிக்கொண்டிருந்தபோது, உலகமே இனி தமிழருக்கு எதிர்காலம் இல்லை என முற்றுப்புள்ளியிட்டி ருந்த ஒரு சந்தர்ப்பத்தில், அத்தனை அழிவுகளையும், இழிவுகளையும் தாண்டி தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலத்தை நீட்டிக்கும் வல்லமையினை யாருக்கு கொடுத்தார்களோ, அவர்கள் இன்று அந்த நம்பிக்கையை ஏளனம் செய்வதுபோன்றும், மக்களுடைய நம்பிக்கைகளை உதாசீனம் செய்வது போன்றும் எண்ணத்தோன்றுகின்றது.
அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தலைவருமா ன இரா.சம்மந்தன் அவர்கள் பாராளுமன்றில் ஆற்றியிருந்த ஒரு உரை நாம் மேலே கூறிய கருத் துக்களுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது. வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக வெளியேற்ற வேண்டியதில்லை, படைக்குறைப்பை மேற்கொண்டு, படைகளை அவர்கது முகாம்களுக்குள் முடக்கினால்போதும்; என்றும் குறிப்பிட்டதுடன், விடுதலைப்புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பென்றும், குறிப்பிட்டிருந் தார்.
கடுமையான விமர்சனங்களை உருவாக்கி விட்டிருக்கும் இக்கூற்றுக்களின் நீள அகலம் தாற்பரியம் என்பவற்றையும், இக்கூற்றுக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிர்வலைகள் பற்றியும் இன்றுவi ரயில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தன்னும் மக்களுக்கு பதிலளிக்க வில்லை. வெளியே தம்மையொரு கடும்தேசியவாதிகளாக காட்டிக்கொள்ளும் இவர்கள் உள்ளே ஒளித்து வைத்திருக்கும் தங்கள் மாயத்தோற்றங்களை மக்களுக்கு காண்பிப்பதே கிடையாது.
இந்நிலையில் இரா.சம்மந்தன் இந்த கருத்து நிலைப்பாட்டை என்ன அடிப்படையில் நின்று கொண் டு பேசியிருக்கின்றார் என்பதை நாம் இங்கு பேசுவது சாலப்பொருத்தமானதாக இருக்கும்.தனது அரசியல் வாழ்க்கையே தமிழ் மக்களை ஏமாற்றித்தான் தொடங்கியது என்பது அவரே பல தடவை ஒப்புக் கொண்ட விடயம். தமிழ் மக்கள் ஒருபோதும் தனித் தமிழீழத்தை கோரியதில்லை என பல தடவைகள் கூறும் சம்பந்தன் முதன்முதலில் 1977ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி இதே தமிழ் மக்களிடம் தனித்தமிழீழத்திற்கான ஆணையை கோரியதும், அதற்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவு என்பதும் அரசியல் கத்துக்குட்டிகள் கூட மறுக்கமுடியாத உண்மை.
தன்னை புலிகள் சுடப்படவேண்டியவர்கள் பட்டியலில் வைத்திருந்ததாக கூறிப்பிடும் சம்மந்தர் அது எதற்காக என்பதை மறந்திருக்கின்றார். 1977ம் ஆண்டு தமிழீழத்திற்கான ஆதரவை கோரி மக்களிடம் ஆதரவினை பெற்றுவிட்டு, ஜனநாக வழியிலான போராட்டங்கள் தோற்றுப்போனபோது அந்த தமிழீழ சிந்தனையை இளைஞர்கள் கையிலெடுத்தனர். அதற்கு துரோகமிழைக்கும் வகையில் செயற்பட்டமையாலேயே சம்பந்தன் சுடப்படுவோர் பட்டியலில் இணைக்கப்பட்டார் என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதனை சம்பந்தன் அவர்கள் மறைக்கவோ மறுக்கவோ வேண்டாம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பல தியாகங்களை ஏற்று, உலகமே வியந்து பார்க்குமளவில் பல யுத்தங்களை செய்து வெற்றியீட்டிய காலப்பகுதியில் இதே சம்மந்தர் எங்கிருந்தார், என்ன செய்தார்? எப்படியிருந்தார் என்பதை நாம் கூறவேண்டிய அவசியம் கிடையாது.
இதன் பின்னர் புலிகள் ஆனையிறவை வீழ்த்தி, கட்டுநாயக்கா விமான நிலையத்தினை தாக்கி போரியல் வரலாற்றில் பல திருப்பங்களை ஏற்படுத்தியதன் பின்னரே இவர் புலிகளின் பாதங்களில் சரணடைந்து கொண்டிருந்தார். இப்போது புலிகள் தன்னை சுடப்படுவோர் பட்டியலில் வைத்திருந் ததாக கூறும் இதே சம்மந்தர் அன்று ஏன் புலிகளிடம் சென்றார்.
தனக்கு தலைமைப் பதவி கிடைக்குமென்பதற்காகவா?? புலிகள் அழிக்கப்படுவதற்கு இந்தியாவினதும், இலங்கை அரசாங்கத்தினதும் ஆசீர்வாதத்துடன், அரியாசனம் ஏறியிருக்கும் இவர் தமிழினத்தை மெல்லச் சிதைத்து வருகின்றார். ஜெனிவாவில் தெரிந்த ஒளிக்கீற்று தமிழினம் ஆவலகாக எதிர்பார்த்திருக்க அதை காலால் எட்டி உதைத்தவர், பின்னர் சிங்கக்கொடி அசைத்து மகிழ்ந்தவர். இறுதியில் மாகாண சபைக்குள் மண்டியிட்டு தமிழனத்தின் அரசிலையே முடக்கினார். இத்துடன் முடியவில்லை. தற்போது போராட்டத்தை பயங்கரவாதம் என்று குறிப்பிடுகின்றார். போராடியது யார்? எங்கள் ஒவ்வொருவரினதும் அக்கா, அண்ணா, தங்கை, தம்பி, அப்பா, அம்மா, மச்சாள், மச்சாள் தானே!
அப்போ போராடிய நாமனைவரும் பயங்கரவாதிகள். சம்மந்தரையும் அவருக்கு ஆலவட்டம் வீசும் சிலரையும் தவிர, சரி,பிழைகளுக்கு அப்பால் பச்சை ஆக்கிரமிப்புக்களிலிருந்தும் சிங்களவரின் கொடிய ஒடுக்குமுறையிலிருந்தும் எம்மைப்பாதுகாத்தது இந்த விடுதலைப்போராட்டமே என்பதை தமிழ் மக்களே ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
இது யாவரும் அறிந்த உன்மை. இவரது கருத்தின் படி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கூட பயங்கரவாதிகளா? இந்தப் பயங்கரவாதிகளுக்காக ஏன் இவரது தலைமயிலான கூட்டமைப்பு போராட்டம் நடத்துகின்றது? மக்களை ஏமாற்றி வாக்குப்பறிக்கவா?
இவர் இராணுவம் வெளியேற கூடாது என்பதற்கு ஒரு நியாயமான காரணம் உண்டு அதாவது இராணுவம் இல்லாவிட்டால் தன்னையும் தனது போலிக்கூட்டத்தையும் மக்கள் துரத்தி விடுவார்கள் என்பதாலாகும். சம்மந்தர் தலைமையிலான கூட்டமைப்பு துரோகங்களைச் செய்யும்போது அதை எப்போதும் நியாப்படுத்தும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தம்மையொரு தேசியவாதிகளாக காட்டிக்கொண்டு, கூட்டமைப்பின் துரோகங்களை மூடிமறைக்கும் ஓர் முகத்திரையாக இருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமலிருக்க வேண்டுமாயின் சம்பந்தன் போன்ற ஆணவம் பிடித்தவர்களை மக்கள் விரைவில் தூக்கியெறிய வேண்டும்.

தாயகத்திலிருந்து வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக