27 டிசம்பர் 2012

பிரணாப்பின் மகன் பெண்களை இழிவுபடுத்தி பேசியதால் பெரும் சர்ச்சை!

அபிஜித் முகர்ஜி 
டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்காக போராடி வரும் பெண்கள் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். கொல்க்ததாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அபிஜித், பெண் போராட்டக்காரர்கள் டிஸ்கோ கிளப்புகளுக்குப் போய் ஆடுகிறார்கள், அழகாகவும் இருக்கிறார்கள் என்று பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்லியில் தற்போது நடந்து வருவதை எகிப்தில் நடந்த போராட்டங்களுடனோ அல்லது உலகின் வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களுடனோ நிச்சயம் ஒப்பிட முடியாது. அது புரட்சி, இது வெறும் போராட்டம். மெழுகுவர்த்தி ஏந்தியபடி போராடட்ம் நடத்துவது, டிஸ்கோ கிளப்புகளுக்குப் போவது - இதையெல்லாம் நாம் மாணவர் பருவத்திலேயே செய்துள்ளோம். ஒவ்வொரு மாணவரும் இதில் ஈடுபட்டிருப்பார்கள். அதையெல்லாம் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது டெல்லியில் பல அழகான இளம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். டிவிகளுக்குப் பேட்டி தருகிறார்கள். கூடவே குழந்தைகளையும் கூட்டி வருகிறார்கள். இவர்கள் மாணவியரா அல்லது வயதான பெண்களா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது என்றார் அவர். பிரணாப் முகர்ஜியின் மகன் இவ்வாறு பேசியுள்ளது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக