30 டிசம்பர் 2012

ஈழத் தமிழரைப் பாதுகாக்க களத்தில் இறங்குவோம்: மலேசிய மாநாட்டில் அழைப்பு

இலங்கையில் தமிழர்களுக்கு இனியும் அவலம் ஏற்படக்கூடாது. எதிர்காலத் தமிழ்ச் சந்ததியினரைப் பாதுகாக்க முழு மூச்சுடன் நாம் களத்தில் இறங்க வேண்டும் என மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் இன்பவர் இப்ராஹிம் தெரிவித்திருக்கின்றார். மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மலேசியாவில், பெட்டாலிங் தோட்ட மாளிகையில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு அன்வர் இப்ராஹிம் உரையாற்றினார். இலங்கைத் தமிழர்களின் இன்னல் தீர உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என இந்த மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டது.
"இலங்கையில் இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியானமை வன்முறையான ஆட்சியை வெளிப்படுத்துகின்றது" எனக் குறிப்பிட்ட அன்னவர் இப்ராஹிம், "பொஸ்னியா மற்றும் பலஸ்தீன மக்களின் துயரங்களைக் காட்டிலும், இலங்கைத் தமிழர்களின் துயரம் கொடியது" எனச்சுட்டிக்காட்டினார்.
சொந்த மக்களையே அழித்தொழிப்பது எந்த நாட்டிரலும் இருக்கக்கூடாது. இனியும் இப்படி ஒரு அவலம் தமிழர்களுக்கு ஏற்படக்கூடாது. எமது எதிர்கால தமிழினச் சந்ததியினரைப் பாதுகாக்க இன்றே நாம் முழுமூச்சாகக் களமிறங்க வேண்டும் எனவும் இப்ராஹிம் அழைப்பு விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக