27 டிசம்பர் 2012

ஈரான் - தமிழ் அகதிகள் இடையே மோதல்!

பபுவா நியுகினியின் மனுஸ் தீவில் கிறிஸ்மஸ் தினத்தன்று ஏற்பட்ட கைகலப்பில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனுஸ் தீவு அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களுக்கும் ஈரான் அகதிகளுக்கும் இடையில் இம்மோதல் இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் உறுதி செய்துள்ளார்.
இணைய அறையில் இந்த மோதல் ஏற்பட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ஈரான் அகதிகள் விடுத்த அழைப்பை தமிழ் அகதிகள் மறுக்கவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
அகதி முகாமில் சேவையில் இருந்த G4S என்ற நிறுவனத்தின் ஊழியர் ஒருவரும் மோதலில் காயமடைந்துள்ளார்.
மோதல் குறித்து மனுஸ் தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மனுஸ் தீவில் 30 சிறுவர்கள், பெண்கள் உட்பட இலங்கை, ஈரான், ஆப்கான், ஈராக், பாகிஸ்தான் அகதிகள் 130 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக