19 டிசம்பர் 2012

அதிக சேதம் மட்டக்களப்பிற்கு, அதிக மரணம் மாத்தளைக்கு!

அதிக சேதம் மட்டக்களப்பிற்கு, அதிக மரணம் மாத்தளைக்குநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு மாத்தளை மாவட்டத்தில் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.
காலநிலை சீர்கேட்டால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் மாவட்ட அடிப்படையில் பின்வருமாறு,

மட்டக்களப்பு மாவட்டம்:-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 34,753 குடும்பங்களைச் சேர்ந்த 1,35,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஒருவர் காணாமற்போயுள்ளார். சுழல் காற்று காரணமாக 115 வீடுகள் முழுமையாகவும் 607 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. நிர்க்கதியான 556 குடும்பங்களைச் சேர்ந்த 2169 பேர் 7 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்டம்:-
சீரற்ற காலநிலையால் மாத்தளை மாவட்டத்தில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 2,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்தளையில் அதிகூடிய 8 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு 13 பேர் காயமடைந்த நிலையில் 10 பேர் காணாமல் போயுள்ளனர். 32 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை 82 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 628 குடும்பங்களைச் சேர்ந்த 1,583 பேர் 15 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டம்:-
கண்டி மாவட்டத்தில் இதுவரை 101 குடும்பங்களைச் சேர்ந்த 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் மரணித்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளனர். 5 வீடுகள் முழுமையாகவும் 44 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இடம்பெயர்ந்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 160 பேர் 3 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டம்:-
இம்மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 138 குடும்பங்களைச் சேர்ந்த 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. இடம்பெயர்ந்த 19 குடும்பங்களைச் சேர்ந்த 123 பேர் 3 தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டம்:-
இம்மாவட்டத்தில் 2,271 குடும்பங்களைச் சேர்ந்த 5,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் காயமடைந்துள்ளனர். 30 வீடுகள் முழுமையாகவும் 147 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. 2,135 குடும்பங்களைச் சேர்ந்த 5,582 பேர் 17 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டம்:-
இங்கு 62 குடும்பங்களைச் சேர்ந்த 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர். 5 வீடுகள் முழுமையாகவும் 4 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் ஒரு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டம்:-
இங்கு 3,283 குடும்பங்களைச் சேர்ந்த 13,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் காணாமற் போயுள்ளனர்.

மொனராகலை மாவட்டம்:- இம் மாவட்டத்தில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 06 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் ஒரு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குருணாகல் மாவட்டம்:- 3,558 குடும்பங்களைச் சேர்ந்த 12,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டம்:- 706 குடும்பங்களைச் சேர்ந்த 3,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக