பல்கலைக்கழக வளாகத்தில்அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை தாம் முன்னெடுத்துள்ளதாகவும்,மாணவர்களது உரிமைகளில் இராணுவம் தலையிடுவது தவிர்க்கப்படவேண்டும் என இதன்போது வலியுறுத்துவதாகவும் மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்போது ஆசியாவின் ஆச்சரியம் என்பது அடக்குமுறை தானா? அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களை தாக்கியதேன்?, மாணவர்களது பாதுகாப்பை கேள்விக்குறியாக்காதே?, மாணவிகளின் விடுதிகளுக்கு இராணுவம் வேண்டாம் என்ற கோசங்களை மாணவர்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக