08 டிசம்பர் 2012

பிரதம நீதியரசரை பைத்தியக்கார பெண்மணி"என கேலி செய்த ஆளும் கட்சியினர்!

"பைத்தியக்கார பெண்மணி" என்று நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் விளித்தமையை அடுத்தே இலங்கையின் பிரதம நீதியரசர், குற்றவியல் விசாரணைகளில் இருந்து வெளியேறினார் என்று ஏஎப்பி தெரிவித்துள்ளது. பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் சட்டத்தரணிகளை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக "நோனா" "பேபி" என்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பிரதம நீதியரசரை கேலி செய்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே ஏஎப்பி தமது செய்தியை வெளியிட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்சவின் சில சட்டமூலங்களை உயர்நீதிமன்றத்தின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடியாமை காரணமாகவே சிராணி பண்டாரநாயக்கவின் மீது குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்டது என்று ஏஎப்பி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக